47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

யாஸ் பயுல்: சேதத்தை மதிப்பிட மேற்கு வங்கம் வருகிறது மத்திய ஆய்வுக் குழு

மத்திய அரசின 7 பேர் கொண்ட ஆய்வுக் குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சேதங்களை மதிப்பிட உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
யாஸ் பயுல்: சேதத்தை மதிப்பிட மேற்கு வங்கம் வருகிறது மத்திய ஆய்வுக் குழு
Updated On :5 ஜூன் 2021, 6:45 am

PTI


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் காரணமாக ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் 7 பேர் கொண்ட ஆய்வுக் குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சேதங்களை மதிப்பிட உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆய்வுக் குழு நாளை மேற்கு வங்கம் வந்து மூன்று நாள்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை நடத்தி ஜூன் 9-ஆம் தேதி தில்லி திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுப் பயணத்தின் போது மேற்கு வங்க மாநில முக்கிய அதிகாரிகள் மற்றும் நிதியமைச்சகத்துடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

மே 26-ஆம் தேதி யாஸ் புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.