ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லியில் வீடு வீடாக கரோனா தடுப்பூசி: கேஜரிவால்

தில்லியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :7 ஜூன் 2021, 8:11 am

DIN


தில்லியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லியில் கரோனா இரண்டாம் அலை பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 7) முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தில்லியில் பேசிய முதல்வர் கேஜரிவால், 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் ஒரு மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்.

தில்லியில் பொதுமக்கள் பலர் தடுப்பூசி செலுத்துக்கொள்ள முன்வருவதில்லை. இதனால், மண்டல அளவிலான அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இரு நாள்களில் தங்களது பணிகளைத் தொடங்குவார்கள்.

கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் பரவியுள்ள வதந்திகளை போக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.