இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உத்தரகண்டில் ஜூன் 15 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் அமலில் இருக்கும்  பொது முடக்கம் ஜூன் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
உத்தரகண்டில் ஜூன் 15 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
Updated On :7 ஜூன் 2021, 8:12 am

PTI

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உத்தரகண்ட் மாநிலத்தில் அமலில் இருக்கும்  பொது முடக்கம் ஜூன் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தற்போது மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை காலை வரை அமலில் இருக்கும் நிலையில், அது இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் வெளியிட்டுள்ளார். 

அதில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கரோனா இல்லை என்ற சான்று வைத்திருக்கும் 20 பேர் திருமணங்களில் பங்கேற்கவும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மளிகைக் கடைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது ஜூன் 9 மற்றும் ஜூன் 14 ஆம் தேதிகளில் திறக்கலாம் என்றும் அன்றைய தினங்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.