இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனிடையே ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு செயல்படுத்த வேண்டிய நலத்திட்டங்கள் குறித்தும் இதில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
கரோனா பரவலால் விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் கரோனா இரண்டாம் அலையில் தொற்று பரவல் குறைந்து வருகிறது. தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் முழு ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...