இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தெலங்கானாவில் ஜூன் 20 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

தெலங்கானாவில் ஜூன் 20-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜூன் 2021, 4:43 pm

DIN

தெலங்கானாவில் ஜூன் 20-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஏற்கெனவே அமலில் இருக்கும் பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. 

இந்த நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பொது முடக்கத்தை நாளை முதல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் "குடிமக்கள் வீடு திரும்ப பிற்பகல் 6 மணி வரை பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை பொது முடக்கம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துப்பள்ளி, மதிரா, நல்கொண்டா, நாகார்ஜுனா சாகர், தேவரகொண்டா, முனுகோடு, மிரியலகுடா ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.