கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி, கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், கரோனாவிலிருந்து 11 நாள்களில் மீண்டுள்ளார்.
கரோனா பாதித்த 104 வயது மூதாட்டி ஜானகி அம்மாளின் உடல்நிலை, மே 31-ஆம் தேதி மோசமடைந்தது. உடனடியாக அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக, 11 நாள்களில், பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
அவருடன் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மருமகளும், மருமகளின் தாயாரும் இன்னமும் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.