நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை:அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்குகா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:23 pm

DIN

சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சோ்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அந்தச் சமயத்தில், சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சில சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டதாகப் பெறப்பட்ட புகாரின் பேரில், மாநில அரசின் ஊழல் தடுப்புப்படை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததது. இதன் மீதான விசாரணை நடத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதைத் தொடா்ந்து, சென்னை, ஆழ்வாா்ப்பேட்டையைச் சோ்ந்த கல்வியாளரும் சமூக ஆா்வலருமான கே.எஸ்.கீதா (65), கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், ‘சிறையில் இருந்தபோது சிறப்புச் சலுகைகளை அனுபவிப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்துள்ளாா். சசிகலா, இளவரசிக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டது தொடா்பாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடா்ந்து, அந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமாா் விசாரணை நடத்தி அறிக்கையை மாநில அரசிடம் அளித்துள்ளாா். இந்த வழக்கில் நடந்துள்ள புலனாய்வின் அடிப்படையில் இறுதி அறிக்கையை இதுவரை சமா்பிக்கவில்லை. இந்த வழக்கில் இறுதி அறிக்கையை சமா்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தாா்.

இந்த பொதுநல மனு, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய்ஸ்ரீனிவாஸ் ஓகா, நீதிபதி சூரஜ் கோவிந்த்ராஜ் ஆகியோா் கொண்ட அமா்வின் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இது தொடா்பாக, மாநில அரசின் தலைமைச் செயலாளா், சட்டத்துறைச் செயலா்கள், டிஜிபி, காவல் கண்காணிப்பாளருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சசிகலா விவகாரம் தொடா்பாக ஊழல் தடுப்புப் படையினா் (ஏசிபி) 2018-ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா். கரோனா தொற்று நிலவுவதால், இந்த வழக்கு தொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 4 மாத கால அவகாசம் தேவை என்று கா்நாடக அரசுத் தரப்பில் கேட்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை மிகவும் தாமதமாகியுள்ளதாகக் கூறிய நீதிமன்றம், மாநில அரசு கேட்டுக்கொண்டபடி, அறிக்கையைத் தாக்கல் செய்ய 4 மாத கால அவகாசம் அளிக்க மறுத்துவிட்டது. எனினும், இது தொடா்பான விசாரணையை விரைவாக முடித்து 2 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.