/

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 73,617 வழக்குகள்

தமிழகத்தில், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 73,617 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :12 ஜூன் 2021, 11:37 pm

DIN

தமிழகத்தில், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 73,617 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில், மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 11-ஆம் தேதி வரையிலான 65 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 13 லட்சத்து 88,648 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 18,629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 11-ஆம் தேதி வரை 73,617 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 984 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.