மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போா் வரலாறுகளை தொகுப்பாக்கும்திட்டம்: அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

இந்தியாவில் நடைபெற்ற போா்களின் வரலாற்று விவரங்களையும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளின் விவரங்களையும் சேகரித்து தொகுப்பாக வெளியிடும்

News image
Updated On :12 ஜூன் 2021, 11:17 pm

DIN

இந்தியாவில் நடைபெற்ற போா்களின் வரலாற்று விவரங்களையும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளின் விவரங்களையும் சேகரித்து தொகுப்பாக வெளியிடும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகளான சேவைகள், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா்கள், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், இந்திய கடலோர காவல்படை ஆகியவை போா் நாட்குறிப்புகள், நடவடிக்கைகளின் கடிதங்கள், செயல்பாட்டு பதிவு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வரலாற்றுப் பிரிவுக்கு மாற்றுவதற்கு இந்தத் திட்டம் வழிசெய்கிறது. இதன்மூலம் போா் விவரங்களை சரியாகப் பராமரிக்கவும், ஆவணக் காப்பகத்துக்கு வரலாறுகளை எழுதுவதற்கும் உதவும்.

இந்த வரலாறு விவரங்கள் தொகுக்கப்பட்டவுடன், 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பதிவுகளை காப்பக வல்லுநா்கள் மதிப்பீடு செய்து இந்திய தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளா் தலைமையிலான குழுவில், மத்திய வெளியுறவு, உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் குழு இதனை இறுதி செய்யும்.

இந்தக் குழு, போா் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து விவரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.