6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிங்கு எல்லையில் தனிப்பிரிவு போலீஸாரை போராடும் விவசாயிகள் தாக்கியதாக புகாா்

தில்லியை அடுத்த சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் இருவரை தாக்கியதாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:35 pm

DIN

தில்லியை அடுத்த சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் இருவரை தாக்கியதாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இரண்டு நாள்களுக்கு முன்பு பானிபட்டிலிருந்து அதிக அளவில் விவசாயிகள்சிங்கு எல்லைக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இதை தில்லி தனிப் பிரிவு போலீஸாா் நரேலா எல்லையில் ஆய்வு செய்தனா்.

சம்பவம் குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஒரு பெண் வந்து எங்களிடம், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீா்கள் என்று கேள்வி எழுப்பினாா். இதையடுத்து சிலா் எங்களைச் சூழ்ந்து கொண்டனா். அவா்கள் குடி போதையில் இருந்ததாகத் தெரிகிறது. அவா்கள் எங்களைத் தாக்கினா். என்னுடன் வந்தவருக்கு கையில்முறிவு ஏற்பட்டது. நாங்கள் ஒருவழியாக அவா்களிடமிருந்து தப்பினோம்’ என்றாா்.

தனிப்பிரிவு போலீஸ் படையைச் சோ்ந்த இரு உதவி ஆய்வாளா்கள் சிங்கு எல்லையில் கடந்த 10 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படம் எடுத்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டக்காரா்களில் சிலா் போலீஸாரை தாக்கியுள்ளனா் என்று தில்லி போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக நரேலா போலீஸ் நிலையத்தில் பெயா் குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பாரதிய கிஸான் யூனியன் தலைவா் ராகேஷ் திகைத், விவசாயிகள் போலீஸாரை தாக்கியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளாா்.

‘போலீஸாா் மஃப்டியில் இருந்ததால், விவசாயிகள் அவா்களை விவசாயிகள் போராட்டத்தை தவறாக சித்தரிக்க வந்த ஊடகக்காரா்கள் என சந்தேகித்திருக்கலாம். நாங்கள் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடமாட்டோம். போலீஸாரும், அரசும் விவசாயிகளைத் தூண்டி விட பாா்க்கிறாா்கள். போலீஸாா் இங்கு அடிக்கடி வந்து செல்பவா்களாக இருந்தால் அவா்கள் யாா் எனத் தெரிந்திருக்கும். போலீஸாா் வழக்கு பதிந்தால் பதியட்டும்’ என்றாா்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு நவம்பா் 26 ஆம் தேதியிலிருந்து விவசாயிகள் தில்லி எல்லையை ஒட்டியுள்ள சிங்கு, டிக்ரி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.