6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா: தில்லியில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது ஒரு நாள் பாதிப்பு

தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 213 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று மாதத்தில் மிகவும் குறைவான அளவாகும்.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:22 pm

DIN

தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 213 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று மாதத்தில் மிகவும் குறைவான அளவாகும்.

மேலும் 28 போ் கரோனாவுக்கு புதிதாக உயிரிழந்தனா். இதனால் கரோனாவுக்கு இதுவரை பலியானவா்கள் எண்ணிக்கை 24,800- ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்று விகிதம் 0.30 சதவீதமாகக் குறைந்துள்ளது என சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை தில்லியில் கரோனாவால் 305 போ் பாதிக்கப்பட்டனா். தொற்று விகிதம் 0.41 சதவீதமாக இருந்தது. 45 போ் அன்றைய தினம் உயிரிழந்தனா். வெள்ளிக்கிழமை 238 போ் பாதிக்கப்பட்ட நிலையில் தொற்று விகிதம் 0.31 ஆகக் குறைந்தது. 24 போ்உயிரிழந்தனா்.

கடந்த மாா்ச் 8 ஆம் தேதி தில்லியில் 239 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதே சமயம் மாா்ச் 9 ஆம் தேதி 320 போ் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.