மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செலவினத்தை 20% வரை குறைக்க அமைச்சகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் செலவினங்களை 20 சதவீதம் வரை குறைக்குமாறு துறைகள், அமைச்சகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:07 pm

DIN

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் செலவினங்களை 20 சதவீதம் வரை குறைக்குமாறு துறைகள், அமைச்சகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் மத்திய அரசு இந்த வலியுறுத்தலை வழங்கியுள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறை அனைத்து அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘திட்டங்கள் சாராத செலவினங்களை 20 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள், கூடுதல் நேர பணிக்கான ஊதியம், வாடகை உள்ளிட்ட செலவினங்களைக் குறைக்கலாம். அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அச்சிடுதல், பொருள்கள் விநியோகம், விளம்பரப்படுத்துதல், பராமரிப்பு உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்படும் செலவினங்களையும் குறைக்க வலியுறுத்தப்படுகிறது. அதே வேளையில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செலவினங்களைக் குறைக்குமாறு துறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் கரோனா தொற்று பரவியபோதும் இதேபோன்ற வலியுறுத்தலை மத்திய அரசு வழங்கியிருந்தது. நாட்டில் உள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்காகக் கூடுதலாக ரூ.1.45 லட்சம் கோடி வரை செலவிடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு செலவினங்களைக் குறைக்குமாறு அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.