நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குழந்தைத் தொழிலாளர் பற்றி பென்சில் தளம், 1098-ல் புகார் செய்யலாம்: ஸ்மிருதி இராணி

குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்குமாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி சுபின் இராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

News image

குழந்தைத் தொழிலாளர் பற்றி பென்சில் தளம், 1098-ல் புகார் செய்யலாம்: ஸ்மிருதி இராணி

Updated On :12 ஜூன் 2021, 11:25 am

PTI

புது தில்லி: குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்பான சம்பவங்களை பொதுமக்கள் பென்சில் தளம் அல்லது குழந்தை உதவி எண்ணான 1098- ற்கு புகார் அளிக்குமாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி சுபின் இராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “கல்வி மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உள்ளது. உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று குழந்தைத் தொழிலாளர் முறையை ஒடுக்கும் நமது உறுதித்தன்மையை மீண்டும் வலியுறுத்துவோம். நமது குழந்தைகளுக்கு உரித்தான குழந்தைப் பருவம் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதில், மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு சுட்டுரைச் செய்தியில், “குழந்தைத் தொழிலாளர் சம்பவங்கள் தொடர்பாக https://pencil.gov.in/ என்ற பென்சில் தளத்திலோ அல்லது 1098 என்ற குழந்தை உதவி எண்ணிலோ தெரிவிக்குமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால்... நமது குழந்தைகளுக்கு- நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்”, என்று அமைச்சர் ஸ்மிருதி இராணி குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் கடந்த 2002-ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த நாளை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.