பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் எல்லை வழியாக வந்த புறாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
புறாவின் இரு இறக்கைகளிலும் நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே வண்ணங்கள் பூசப்பட்டுள்ளதால், அது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானிலிருந்து புறா ஒன்று வந்துள்ளது.
ராஜஸ்தானின் கங்காநகர் பகுதியில், உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல் துறையினர் அதனைக் கைப்பற்றினர். அதன் இரு இறக்கைகளிலும் நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இறக்கைகளில் ஆங்காங்கே தீட்டப்பட்டுள்ள வண்ணங்கள் குறியீடுகள் போன்று உள்ளதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


