கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

இந்திய எல்லைக்குள் வண்ணங்களுடன் வந்த புறா: தீவிரவாதிகள் குறியீடா என விசாரணை

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் எல்லை வழியாக வந்த புறாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

News image

இந்திய எல்லைக்குள் வண்ணங்களுடன் வந்த புறா: தீவிரவாதிகளின் குறியீடா என விசாரணை

Updated On :15 ஜூன் 2021, 5:28 pm IST


பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் எல்லை வழியாக வந்த புறாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

புறாவின் இரு இறக்கைகளிலும் நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே வண்ணங்கள் பூசப்பட்டுள்ளதால், அது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Story image

ராஜஸ்தான் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானிலிருந்து புறா ஒன்று வந்துள்ளது.

ராஜஸ்தானின் கங்காநகர் பகுதியில், உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல் துறையினர் அதனைக் கைப்பற்றினர். அதன் இரு இறக்கைகளிலும் நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. 

இறக்கைகளில் ஆங்காங்கே தீட்டப்பட்டுள்ள வண்ணங்கள் குறியீடுகள் போன்று உள்ளதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.