ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் தாஜ் மகால் திறப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான தாஜ் மகால், இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

News image

சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் தாஜ் மகால் திறப்பு

Updated On :16 ஜூன் 2021, 7:07 am

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான தாஜ் மகால், இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தாஜ் மகால் உள்ளிட்ட இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் புதன்கிழமை திறக்கப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணியாதவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தாஜ் மகாலுக்குள் கூட்டம் அதிகம் சேர்வது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.