காசிபூர்: பிறந்த வெறும் 22 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று, கங்கை நதியில் ஒரு மரப் பெட்டியில் மிதந்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் கங்கை நதியில், ஒரு மரப்பெட்டி மிதந்து வந்து கொண்டிருந்தது. அதிலிருந்து குழந்தையின் அழுகுரலும் கேட்டுள்ளது. இதனை அங்கு படகோட்டிக் கொண்டிருந்த ஒருவர் பார்த்து, அந்தப் பெட்டியை திறந்த போது, அதில் பச்சிளம் பெண் குழந்தை அழுதுகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
துணியால் மூடப்பட்டிருந்த அந்தக் குழந்தையுடன் சில இந்துக் கடவுளின் புகைப்படங்களும், குழந்தையின் பிறந்த ஜாதகமும் இருந்துள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். உடனடியாக குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கங்கை நதியில் கிடைத்ததால், காப்பக ஊழியர்களால் கங்கா என்று குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


