எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

தில்லியில் கலைஞர் அருங்காட்சியகம்

தில்லியில் கட்டப்பட்டுவரும் திமுகவின் புதிய கட்சி அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. அந்த கட்டடத்துக்கு "கலைஞர் அறிவாலயம்' என

News image

தில்லி தீனதயாள் உபாத்யாய் மார்க்கில் புதிதாக கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தின் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Updated On :17 ஜூன் 2021, 10:49 pm

புது தில்லி: தில்லியில் கட்டப்பட்டுவரும் திமுகவின் புதிய கட்சி அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. அந்த கட்டடத்துக்கு "கலைஞர் அறிவாலயம்' என பெயர்சூட்டப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. 
இந்த புதிய அலுவலகத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அலுவலகத்தை எளிய முறையில் கட்டும்படி 
உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தில்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது பண்டிட் தீனதயாள் உபாத்யாய மார்க்கில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கட்டடம் கட்ட இடம் அளிக்கப்பட்டது. இதில் பாஜக அலுவலகம் அருகே திமுகவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
சுமார் 11,000 சதுர அடி கொண்ட இந்த இடத்தில் 10,000 சதுர அடியில் 4 மாடிக்கட்டடம் கட்டப்படுகிறது. கீழ் தளத்தில் சுமார் 2,800 சதுர அடியில் மறைந்த முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. இதில் மறைந்த தலைவரின் மார்பளவு சிலையோடு, அவரது நினைவுகூரும் தகவல்கள், அவரது புத்தகங்கள் ஆகியவை காட்சிப்படுத்த இருக்கின்றன. 
இந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு  இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2-ஆவது மாடியில் திமுக கட்சி அலுவலகம் செயல்பட இருக்கிறது. இங்கு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், மற்ற அலுவலர்களின் அறைகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்படுகிறது. மூன்றாவது மாடியில் கலந்துரையாடல், போன்ற கூட்டங்களுக்கான அரங்கு ஒன்றும்  கட்டப்படுகிறது.
நான்காவது மாடியில் விருந்தினர் தங்கும் அறை அல்லது கட்சி தலைவரும் மற்றவர்களும் 
தில்லி வந்தால் அங்கு தங்குவதற்கு வசதியாக கட்டப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தக் கட்டடப் பணிகள் கரோனா  நோய்த்தொற்று காரணமாக முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. 
இந்த கட்டடத்தை பார்வையிட வந்த தமிழக முதல்வர் கட்டடப்பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தார். அடிக்கடி சுவர் வண்ணம் அடிப்பதை தவிர்க்க திட்டப்படி பளிங்கு கற்களை பதிக்கப்பட  இருந்தது. 
ஆனால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மறைந்த தலைவரின் நினைவுகளைப் போற்றும் வகையில் இருக்கும் இந்தக் கட்சிஅலுவலகம் அவரைப்போன்று எளிமையாக இருக்கவேண்டும் எனக் கூறி, அந்த பளிங்கு கற்கள் பதிப்பதை தவிர்க்க யோசனை கூறியுள்ளார். 
பெயர் உறுதிசெய்யப்படாத இந்த கலைஞர் அறிவாலயம்  இரண்டு மாதங்களில் திறக்கப்பட இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.