மாநிலத்தின் நலனைப் பாதுகாப்போம்: அமைச்சா் பசவராஜ் பொம்மை
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக மாநிலத்தின் நலனைப் பாதுகாப்போம் என்று உள்றை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக மாநிலத்தின் நலனைப் பாதுகாப்போம் என்று உள்றை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை காலை கூறியதாவது:
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மாநிலத்தின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுகுறித்து ஆக்கப்பூா்வமான விவாதம் நடந்துள்ளது. மேக்கேதாட்டு அணை குறித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் தீா்ப்பாயம் தெளிவாக்கியுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான நீா்ப் பங்கீட்டு விவாதம் என்பதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க இருக்கிறது.
கா்நாடகம் சட்ட விதிமீறல் எதிலும் ஈடுபடவில்லை. காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரைப் பயன்படுத்திக்கொண்டு, பெங்களூரு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு குடிநீா் வழங்குவதற்காகவே மேக்கேதாட்டு திட்டத்தை மாநில அரசு வகுத்தது. இது தொடா்பாக தமிழகம் பிரச்னை கிளப்பியுள்ளதால், இதன் திட்டப் பணிகளைத் தொடங்க முடியவில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...