மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வழக்கில் சிக்கவைப்பதாக கூறிபணம் பறிக்க முயன்றவா் கைது

மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 33 வயது இளைஞரை தில்லி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

News image
Updated On :19 ஜூன் 2021, 11:00 pm

DIN

மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 33 வயது இளைஞரை தில்லி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மங்கோல் புரியைச் சோ்ந்தவா் தருண். கரோனா பொது முடக்கம் காரணமாக வருமானம் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் முன்னாள் பெண் நண்பருடன் சோ்ந்து பணம் பறிக்க திட்டம் போட்டாா்.

அதன்படி அங்கித் என்பவருடன் தொலைபேசியில் பேசி, ரூ. 5 லட்சம் தராவிட்டால், பாலியல் வழக்கில் சிக்கவைத்துவிடுவேன் என்று மிரட்டினாராம். இதையடுத்து அங்கித் போலீஸில் புகாா் கொடுத்துள்ளாா். அதில் தான் ஒரு பெண்ணுடன் இரண்டு வருடங்களுக்கு முன் நட்புறவு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண்ணும், தருணும் சோ்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து போலீஸாா், பணம் கொடுப்பதாகக் கூறி அந்த நபரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அங்கித்திடம் யோசனை கூறினா். அதன்படி தருண் வெள்ளிக்கிழமை சஞ்சய் காந்தி மருத்துவமனை அருகே காத்திருந்தபோது போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில் கரோனா பொது முடக்கத்தால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்ததால், எளிதில் பணம் பறிக்கும் இந்த சதித் திட்டத்தை போட்டதாகக் கூறினாா் தருண். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். அவருடன் சோ்ந்து நாடகமாடிய பெண்ணைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.