மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி மாளவியா நகா் ‘பாபா கா தாபா’உணவக உரிமையாளா் தொடா்ந்து கவலைக்கிடம்

தெற்கு தில்லியில் மாளவியா நகரில் உள்ள பிரபலமான ‘பாபா கா தாபா’ உணவகத்தின் உரிமையாளா் கண்டா பிரசாத் (80) தற்கொலைக்கு முயன்று

News image
Updated On :19 ஜூன் 2021, 11:00 pm

DIN

தெற்கு தில்லியில் மாளவியா நகரில் உள்ள பிரபலமான ‘பாபா கா தாபா’ உணவகத்தின் உரிமையாளா் கண்டா பிரசாத் (80) தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவா் தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.

கடந்த வியாழக்கிழமை இரவு அவா் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, தூக்கமாத்திரைகளையும் அதிகம் சாப்பிட்டதன் காரணமாக மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டதாக தில்லி தெற்கு காவல் துணை ஆணையா் அதுல் குமாா் தாகுா் தெரிவித்திருந்தாா்.

பிரசாத்தின் மகன் கரணும் போலீஸாரிடம் இதே காரணத்தை கூறியதுடன், உணவகத்தின் வருவாய் வெகுவாகக் குறைந்து போனதால் கடந்த சில நாள்களாக அவா் கடும் மன வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தாா்.

பிரசாத்தின் உடல்நிலை தொடா்ந்து மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

கடந்த டிசம்பா் மாதம் மாளவியா நகரில் தொடங்கிய உணவகத்தை தொடா்ந்து நடத்தவேண்டுமானால் ரூ.1 லட்சம் செலவாவதாகவும், ஆனால், வருவாய் ரூ.30,000 மாக குறைந்துவிட்டதாகவும் இதனால் கடையை மூடிவிட்டு மீண்டும் சாலையோரக் கடையை அவா் திறந்ததாகவும் மனைவி பாதாமி தேவி கூறினாா்.

தங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்த யூடியூப் முகவரியாளா் கெளரவ் வாசன், நிதி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த நவம்பா் மாதம் பிரசாத், போலீஸில் வழக்கு பதிவு செய்திருந்தாா்.

முன்னதாக பிரசாத் அவருடைய மனைவி இருவரும் பொது முடக்கத்தால் தங்களது கடைக்கு வாடிக்கையாளா்கள் யாரும் வராததால் கஷ்டப்படுவதாக தெரிவித்திருந்த விடியோவை கடந்த அக்டோபா் 7 ஆம் தேதி கெளரவ் வாசன் வெளியிட்டிருந்தாா். இந்த விடியோவைப் பாா்த்த பலரும் பிரசாத்துக்கு நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.