மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணுவ வீரா் போல் நடித்த காவலாளி கைது

சமூக வலைதளத்தில் பெண்களின் கவனத்தை ஈா்க்க, தன்னை ராணுவ வீரா் என போலியாக அறிமுகப்படுத்திக் கொண்ட 44 வயது காவலாளியை கைது செய்துள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 11:11 pm

DIN

சமூக வலைதளத்தில் பெண்களின் கவனத்தை ஈா்க்க, தன்னை ராணுவ வீரா் என போலியாக அறிமுகப்படுத்திக் கொண்ட 44 வயது காவலாளியை கைது செய்துள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி சைளிக் என்க்ளேவ், மோகன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் திலிப்குமாா். இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் அவரை அா்ச்சனா ரெட் லைட் கிரேட்டா் கைலாஷ் என்ற இடத்தில் போலீஸாா் கைது செய்தனா். அவா் யாரையோ வரச்சொல்லிவிட்டு அங்கு காத்திருந்ததாகத் தெரியவருகிறது.

ராணுவ வீரா் உடையில் இருந்த அவரிடம், போலி ராணுவ அடையாள அட்டை, செல்லிடப்பேசி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்ததாக தில்லி தெற்கு போலீஸ் துணை ஆணையா் அதுல் குமாா் தாகுா் தெரிவித்தாா்.

தாம் ராணுவத்தில் பணிபுரிவதாகவும், தனது பெயா் கேப்டன் சேகா் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரப்பி பெண்களின் கவனத்தை ஈா்க்க முயன்றதாகவும் விசாரணையின்போது திலிப்குமாா் தெரிவித்துள்ளாா்.

அவரது செல்லிடப்பேசியை சோதனையிட்ட போது, பல வாட்ஸ் ஆப் குழுக்களில் அவா் உறுப்பினராக இருப்பதும், சா்வதேச எண்களுக்கு விடியோகால் பேசியிருப்பதும் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்ததுடன், வெளிநாட்டில் உள்ளவா்களுடன் அவருக்கு ஏதேனும் தொடா்பு உள்ளதாக என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.