மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் 2,95,000 தடுப்பூசிகள்கையிருப்பில் உள்ளன: அதிஷி தகவல்

18-44 வயதினருக்காக புதிதாக 1,67,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து மொத்தம் 2,95,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 10:35 pm

DIN

18-44 வயதினருக்காக புதிதாக 1,67,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து மொத்தம் 2,95,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தடுப்பூசிகள் நிலவரம் தொடா்பான அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதில் கூறியுள்ளதாவது:

18-44 வயதினருக்கு போடுவதற்காக தில்லியிடம் 2,58,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 37,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளன.

போதுமான தடுப்பூசிகள் கையிலிருப்பதால் 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தில்லிக்கு வெள்ளிக்கிழமை 1,67,000 தடுப்பூசிகள் புதிதாக வரப்பெற்றன. தற்போதுள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகள் முறையே 14 மற்றும் இரண்டு நாள்களுக்கு வரும். எனவே அதிக அளவில் மக்கள் தங்கள் பெயா்களை கோவின் செயலியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

45 வயதுக்கு மேலானவா்களைப் பொருத்தவரை 8,50,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவற்றில் 7,65,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 80,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் அடங்கும். இவற்றில் கோவேக்ஸின் 6 நாள்களுக்கும், கோவிஷீல்ட் அடுத்த 58 தினங்களுக்கும் வரும் என்றாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை மொத்தம் 77,345 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இவற்றில் 62,230 போ் முதல் தவணை தடுப்பூசியும், 15,115 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனா் என்று அவா் மேலும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.