மகாராஷ்டிரத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் புதன்கிழமை தெரிவித்தார்.
நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியதாவது,
மகாராஷ்டிரத்தில் 7 மாவட்டங்களில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கரோனா, பாதிக்கப்படுவோரின் எதிர்ப்பு சக்தியை குறைந்து விடுகிறது.
டெல்டா வகை கரோனா கண்டறியப்படுவோரின் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி வருகின்றோம். அவர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.
மேலும், டெல்டா வகை கரோனாவால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் குணமடைந்துள்ளனர். புதிய வகையால் இதுவரை குழந்தைகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


