ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ம.பி.யில் தடுப்பூசி போடுபவர்களுக்கு ரீ-சார்ஜ் கூப்பன், புடவை, குடை பரிசு

அரசு அதிகாரிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றன.

News image
ம.பி.யில் தடுப்பூசி போடுபவர்களுக்கு ரீ-சார்ஜ் கூப்பன், புடவை, குடை பரிசு
Updated On :24 ஜூன் 2021, 12:36 pm

DIN

மத்தியப் பிரதேசத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், அரசு அதிகாரிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றன.

குறிப்பாக ஊரக மற்றும் கிராமப் பகுதி மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லிடப்பேசிக்கான ரீசார்ஜ் கூப்பன், புடவை, அலங்காரப் பொருள்கள் போன்றவற்றை பரிசாக வழங்கி வருகிறார்கள்.

YouTube video thumbnail

போபால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் டோக்கன் எண்களை குலுக்கிப் போட்டு, அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.200 மதிப்புள்ள செல்லிடப்பேசி ரீ சார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. பீடர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குடை, புடவை போன்றவை பரிசளிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.