நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹைதராபாத்: கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு

ஹைதராபாத்தில் உள்ள கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

News image
Updated On :27 ஜூன் 2021, 2:17 pm

DIN

ஹைதராபாத்தில் உள்ள கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு மற்றும் உயிரி பாதுகாப்பு மூன்றாவது கட்ட மையங்களை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மருந்தகங்கள் துறையின் செயலாளர் எஸ் அபர்ணாவும் உடனிருந்தார். 

அப்போது பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வதற்காக நமது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார். 

தடுப்பூசிகளின் உற்பத்தியை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.