பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பஞ்சாபில் நம்பிக்கையை இழந்தது காங்கிரஸ்: சிசோடியா

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஆம் ஆத்மி தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

News image
மணீஷ் சிசோடியா (கோப்புப் படம்)
Updated On :30 ஜூன் 2021, 10:42 am

DIN

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஆம் ஆத்மி தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார். 

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாபில் முகாமிட்டுள்ளனர். 

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று பஞ்சாபில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். 

இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது, 

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டது. மக்களிடம் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இழந்துள்ளது. 

எனவே காங்கிரஸ் அமைப்பது இனி மக்களுக்கு பொருந்தாத அரசாகவே இருக்கும் என்று கூறினார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

2017- சட்டப்பேரவைத் தேர்தல்:

2017 பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. முன்பு ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் 15 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் மட்டுமே வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.