சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தற்போது ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் சரக்கு சேவை விமானங்களுக்கும், அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விமானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.