சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கேரள முதல்வர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார்: சுகாதாரத் துறை அமைச்சர்

​கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஓரிரு நாள்களில் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :1 மார்ச் 2021, 12:06 pm

DIN


கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஓரிரு நாள்களில் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவுள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரில் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா இதுகுறித்து கூறியது:

"பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நானும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினேன். ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முதன்மையானவர்கள் பட்டியலில் இடம்பெறும் வரை காத்திருக்க முடிவு செய்தோம். அந்த முக்கியமானவர்கள் பட்டியலில் வந்துள்ளதால் நாளை நான் தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளனர்."

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 45 முதல் 59 வயதுக்கிடையே இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.