மகாராஷ்டிர மாநிலத்தில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோல் தலைமையில் விதான் பவனுக்கு திங்கள்கிழமை சைக்கிள் பேரணியை நடத்தினர்.
இந்த பேரணியில், மகாராஷ்டிரத்தின் அமைச்சர்கள் பாலாசாகேப் தோரத், அஸ்லம் ஷேக் மற்றும் யஷோமதி தாக்கூர் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே செய்தியாளர்களிடம் பேசிய படோல்,
மக்களைக் கேலி செய்வதாகவும், எரிபொருள் அதிகரிப்பால் சாமானியர்களின் வயிற்றில் அடிப்பதாகவும் படோல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே, பெட்ரோல் விலை உயர்வால், ஏழை மக்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இதில் எரிபொருள் தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.