டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

80% காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி: தில்லி காவல்துறை

தில்லி காவல்துறையினரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
80% காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி: தில்லி காவல்துறை
Updated On :1 மார்ச் 2021, 8:06 am

PTI

தில்லி காவல்துறையினரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை மொத்தம் 66,246 காவல்துறையினருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தில்லியின் 15 மாவட்டங்களில், போக்குவரத்து, குற்றப்பிரிவு, பாதுகாப்பு, மெட்ரோ, ரயில்வே உள்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார். 

தில்லி காவல்துறையில் 80,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். கடந்த 9-ஆம் தேதி தில்லி காவல் ஆணையர் எஸ்.என் ஸ்ரீவாஸ்தவா சாணக்கியபுரியில் உள்ள பிரைமஸ் சிறப்பு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுவரை எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. 

ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கு கரோனா தடுப்பூசி மிகவும் அவசியம். எனவே, அனைவரும் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக்கொள்ளவேண்டும் என்றார். 

கரோனா காரணமாக காவல்துறையில் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.