2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள தில்லி அரசு,
2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆளுநர் உரையுடன் தொடங்கு இந்தக் கூட்டத்தொடரில் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.