டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாகன எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தயார்: பிரதமர் மோடி

நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
வாகன எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தயார்: பிரதமர் மோடி
Updated On :27 ஜனவரி 2024, 7:39 pm

PTI

நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பொது பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி  பேசினார்.

அப்போது, இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதில் முக்கியப் பங்கு இளைஞர்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக உருவாக்குவதே. ஒரு இளைஞருக்கு தான் பெற்ற கல்வி, தன்னுடைய திறன், அறிவு மீது நம்பிக்கை வரும் போதுதான் தன்னம்பிக்கைப் பிறகும் என்றார்.

மேலும், நாட்டில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது. எதிர்கால எரிபொருளாக கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு அடுத்தபடியாக, கல்வி, திறன், ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு போன்றவற்றுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்ககுவிக்கப்பட்டுள்ளது என்றும் மோடி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.