மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,187 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் 6,080 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 47 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,08,586 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20,62,031 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 52,440 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இன்னும் 92,897 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.