எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இந்தியாவில் மேலும் 17,921 பேருக்கு கரோனா: 133 பேர் பலி

இந்தியாவில் இன்று மேலும் 17,921 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
இந்தியாவில் மேலும் 17,921 பேருக்கு கரோனா: 133 பேர் பலி
Updated On :10 மார்ச் 2021, 5:48 am

ANI

இந்தியாவில் இன்று மேலும் 17,921 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17,921 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,62,707 ஆக அதிகரித்துள்ளது. 

நோய்த் தொற்றிலிருந்து இன்று 20,652 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,09,20,046 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,84,598 போ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா பாதிப்பால் மேலும் 133 போ் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,063 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,43,67,906 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரை 22,34,79,877 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 7,63,081 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.