ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வார இறுதி நாள்கள் முழு முடக்கம்: மகாராஷ்டிரத்தில் அமலானது

மகாராஷ்டிர மாநிலத்தில் வார இறுதி நாள்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

News image
Updated On :13 மார்ச் 2021, 5:16 am

DIN


மகாராஷ்டிர மாநிலத்தில் வார இறுதி நாள்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் சுகாதாரக் குழுவினர் தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். 

மத்தியக் குழு மாநில சுகாதாரத்துறையினருடன் இணைந்து கரோனா அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தொற்றைக் குறைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் பரவி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, வார இறுதி நாள்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் முழு முடக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.