தேவைப்பட்டால் திரிணமூல் ஆட்சியமைக்க ஆதரவளிப்போம்: காங்கிரஸ் எம்.பி.

​மேற்கு வங்கத்தில் தேவைப்பட்டால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. அபு ஹாசிம் கான் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


மேற்கு வங்கத்தில் தேவைப்பட்டால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. அபு ஹாசிம் கான் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

"காங்கிரஸை திரிணமூல் நடத்தியவிதம் எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், திரிணமூல் வகுப்புவாத கட்சி அல்ல. தேர்தலுக்குப் பிறகு தேவைப்பட்டால் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிப்போம். இது எனது தனிப்பட்ட கருத்து."

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com