48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

"ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு '

தமிழகத்தின் பெரும்பான்மை ரயில்வே திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக மக்களவையில் தருமபுரி தொகுதி உறுப்பினர் டி. என்.வி.செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On :16 மார்ச் 2021, 10:39 pm

தமிழகத்தின் பெரும்பான்மை ரயில்வே திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக மக்களவையில் தருமபுரி தொகுதி உறுப்பினர் டி. என்.வி.செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 மக்களவையில் ரயில்வே துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின்போது அவர் கூறியதாவது:
 தமிழகத்தில் 10 ரயில் பாதைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய ரயில்வே துறை உறுதி அளித்திருந்தது. அதில், முக்கியமானது சென்னை மாமல்லபுரம் - கடலூர் ரயில் பாதை திட்டம், திண்டிவனம்-நகரி இடையே விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் , சித்தூர் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டம் என தமிழகத்தை முன்னேற்றச் செய்யும் முக்கிய ரயில் பாதைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் திட்டங்களில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது.
 மேலும், தருமபுரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் அனைத்தும் 2-ஆவது நடைமேடையில் நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் வசதிக்காக நடைமேடை ஒன்றில் நிறுத்தப்பட வேண்டும் அல்லது தானியங்கி படி அமைத்துத் தர வேண்டும் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.