தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கர்நாடகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பரிசோதனைகள்: சுகாதாரத் துறை

கர்நாடகத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :17 மார்ச் 2021, 4:33 pm


கர்நாடகத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன."

அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகரும் இதனை சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.