கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியாவில் கரோனாவால் வறுமையில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கரோனா தொற்று பேரிடர் காரணமாக நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான நடுத்தர வர்க்கத்தினர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image

இந்தியாவில் கரோனாவால் அதிகரித்த ஏழ்மையில் சிக்கியவர்களின் எண்ணிக்கை

Updated On :19 மார்ச் 2021, 11:31 am

கரோனா தொற்று பேரிடர் காரணமாக நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான நடுத்தர வர்க்கத்தினர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரோனா தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை சுட்டிக்காட்டி பியூ நிதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் கரோனா பேரிடரால் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைந்து ஏழ்மையை அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலையிழப்பு, வருமானம் குறைதல், அதிகரித்த விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளால் 9.9 கோடியாக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 6.6 கோடியாக சுருங்கிவிட்டதாகவும் நாளொன்றுக்கு ரூ.140க்கும் குறைவாக வருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட வறுமைநிலை காரணமாக மக்கள் வெளிநாடுகளில் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

முன்னதாக கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.6 கோடி மக்கள் வறுமை நிலைக்கு செல்வர் என ஐக்கிய நாடுகளின் அவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.