மகாராஷ்டிரத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஆரம்பம் முதலே அதிகரித்த வண்ணம் உள்ளது. மீண்டும் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி திரையங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் 100 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50% பணியார்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25,833 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


