எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கேரள இளைஞருக்கு வாழ்வளித்த கன்னியாகுமரி இளைஞரின் இதயம்

அரவிந்த்.. தற்போது அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது நினைவுகள் நிச்சயம் பசுமையாகவே இருக்கும். அவரது உடல் உறுப்புகள் மூலம் நான்கு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

News image
கேரள இளைஞருக்கு வாழ்வளித்த கன்னியாகுமரி இளைஞரின் இதயம்
Updated On :19 மார்ச் 2021, 6:51 am

DIN


அரவிந்த்.. தற்போது அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது நினைவுகள் நிச்சயம் பசுமையாகவே இருக்கும். அவரது உடல் உறுப்புகள் மூலம் நான்கு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 25 வயது இளைஞர் அரவிந்த், புதன்கிழமை உயிரிழந்தார். கன்னியாகுமரியைச் சேர்ந்த அரவிந்த், திருவனந்தபுரத்தில் உள்ள கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் ஆதிலிங்கம் - சுஷீலா ஆகியோர் முன் வந்தனர்.

உடனடியாக வியாழக்கிழமை அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அங்கிருந்து கொச்சியில் இதய நோயால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளைஞர் சூரியநாராயணுக்கு பொருத்தப்பட்டது. சிறுநீரகம், கல்லீரல் போன்றவையும் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. 

காவல்துறை, மருத்துவத் துறை, போக்குவரத்துத் துறை என அனைவரது ஒத்துழைப்பாலும், இதயம் மற்றும் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் மிக விரைவாக நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 4 பர் மறுவாழ்வு பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.