மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


