நாக்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த மாநிலம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
கரோனா பரவல் காரணமாக நாக்பூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளதால், மகாராஷ்டிர மாநிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு படையெடுத்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக நாக்பூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
பேருந்து போக்குவரத்து முழுவதும் தடை செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இன்றே சொந்த மாநிலத்திற்கு செல்வதாக புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


