தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

நாக்பூரில் ஊரடங்கு: சொந்த ஊருக்குப் படையெடுத்த புலம்பெயர் தொழிலாளர்கள்

நாக்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த மாநிலம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

News image
Updated On :20 மார்ச் 2021, 1:51 pm

நாக்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த மாநிலம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

கரோனா பரவல் காரணமாக நாக்பூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக கடந்த 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளதால், மகாராஷ்டிர மாநிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு படையெடுத்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக நாக்பூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

பேருந்து போக்குவரத்து முழுவதும் தடை செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இன்றே சொந்த மாநிலத்திற்கு செல்வதாக புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.