ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக சிறைக் கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி

மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக இந்தூர் மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

News image

மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக சிறைக் கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி

Updated On :20 மார்ச் 2021, 12:16 pm

ANI

மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக இந்தூர் மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மத்தியச் சிறையில் பல கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியிருந்தது. இதையடுத்து அவர்களுக்கு சிறைச்சாலையிலேயே தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டன. 

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் சி, தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால் யாரும் தொற்றுக்குப் பலியாகவில்லை என்றாலும், தற்போது ஐந்து கைதிகள் மற்றும் இரண்டு ஊழியர்கள் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் பங்கரா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முதல்முறையாக சிறைச்சாலையில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல்கட்டமாகக் கைதிகள் மற்றும் ஊழியர்கள் என 300 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்தியச் சிறையின் துணை கண்காணிப்பாளர் லக்ஷமன் சிங் படதௌரியா கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.