காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம்: ராகுல்

விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி
Updated On :20 மார்ச் 2021, 10:25 am

DIN

விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தின் டின்சுகியா மாவட்டத்திலுள்ள டிக்போய் பகுதியில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்களிடம் அவர் பேசியதாவது, நாடாளுமன்றத்தில் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவர்கள் நம்மை பேசவிடவில்லை. எனினும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியுடன் நிற்போம். உங்களுக்கு (விவசாயிகளுக்கு) ஆதரவாக என்றுமே காங்கிரஸ் செயல்படும். ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.