பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா தடுப்பூசி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டார் ஜெ.பி.நட்டா

புது தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) கரோனா தடுப்பூசி வசதியை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பார்வையிட்டார். 

News image
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா
Updated On :25 மார்ச் 2021, 12:25 pm

ANI

புது தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) கரோனா தடுப்பூசி செலுத்தும் வசதியை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பார்வையிட்டார். 

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் 9-ம் தேதி ஜெ.பி.நட்டா தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் மேலும் பேசியது, 

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று மருத்துவமனையில் உள்ள மூத்த குடிமக்களுடன் உரையாற்றினார். 

மேலும், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா கரோனா தடுப்பில் முன்னணியில் இருப்பதை நிரூபித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.