எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

மும்பை: முகக்கவசத்திற்காக ரூ.4.06 கோடி அபராதம் வசூல்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.4 கோடியைத் தாண்டியுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2021, 11:38 am IST


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.4 கோடியைத் தாண்டியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முகக்கவசம் அணியாதோரிடம் வசூலிக்கப்பட்டத் தொகை ரூ.4 கோடியைத் தாண்டியுள்ளது.

முகக்கவசம் அணியாமல் சென்ற 2,03,000 பேரிடம் ரூ.4.06 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகமான தொற்று பரவும் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. நாடு முழுவதும் கரோனா அதிகம் உறுதி செய்யப்படும் 10 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மகாராஷ்டிரத்திலேயே உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.