தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாக்பூர் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா  பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு சில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2021, 11:14 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா  பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு சில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னதாக 600  படுக்கைகள் இருந்ததாகவும் தரைத்தளத்தில் வடிகால் பிரச்னை காரணமாக 90 படுக்கைகள் கொண்ட தரைத்தளம் மூடப்பட்டுள்ளதாகவும் மருத்துவமமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

தற்போது மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஒரு சில மருத்துவமனைகளில் இதுபோன்று படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். 

நாக்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3,717 பேருக்கு புதிதாக தொற்று உறுதி ஆகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக மாவட்டத்தில் கரோனா பாதிப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது 33,572 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாக்பூர் மாவட்ட நிர்வாகம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்க விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.