புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றது.
கரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும், முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் மார்ச் 26 முதல் ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது.
அதேசமயம், கல்லூரியில் படிக்கும் இறுதி பருவ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்பு மூலமே நடத்தப்பட உள்ளது.
கரோனா பாதிப்பு தொடர்ந்து புதுச்சேரியில் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


