ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாக்பூரில் ஹோலியன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூட உத்தரவு

நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று அந்நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்.
Updated On :26 மார்ச் 2021, 3:23 pm

DIN

நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று அந்நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்ரத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. 
இங்கு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று அந்நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாக்பூர் நகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும். அத்தியாவசிய கடைகளான காய்கறி, கறிக்கடை போன்றவை மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்படும். 
மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் கூடவும் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் அனுமதி இல்லை என்றார். நாக்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4095 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 35 பேர் பலியாகியுள்ளனர். தற்போதை நிலவரப்படி 36,936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.